பர்மா Muslimகளின் அவலங்களை சர்வதேசப்படுத்த உதவுங்கள்

அன்புள்ள உள்ளங்களுக்கு

கடந்த சில வாரங்களாக பர்மா முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்டு    வரும் அநீதிகளை பார்த்துக்கொண்டு கண்ணீர் வடித்துக்கொண்டு  சும்மா இருக்க முடியவில்லை .









 எந்த முஸ்லீம் நாடுகளும் அமைப்புகளும் ,ஏன் நமது நாட்டு முஸ்லீம் அமைச்சர்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை

பொறுத்தது போதும் . இனியும் பொறுக்க முடியாது



இதோ பர்மா முஸ்லீம்களை பாதுகாக்கும் படி ஐ நா செயலாளரை உடனடியாக கேட்கும் மனு ஒன்றை ஆங்கில மொழியில் எமது இணையம் மூலமாக avaaz .org என்ற சர்வேதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் உருவாக்கியுள்ளோம் .அந்த மனுவில் பர்மா முஸ்லீம்கள் படும் அவஸ்தைகளையும் ,அல்லல்களையும் ,அநீதிளையும் சுருக்கமாக விவரித்துள்ளோம் . அந்த மனுவில் பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க ஐ நா உடனியாக தீர்மானம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உடனடியாக ஐ நா சமாதனப்படையை கண்காணிப்பில் ஈடுபடுத்த அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் .



எனவே தயவு செய்து எமது இந்த முயற்சியை , பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த முயற்சியை வெற்றி பெற வைப்பது முதலில் அல்லாஹ்வின் புறத்திலும் அடுத்ததாக உங்களின் கைகளிலும் உள்ளது

எனவே இந்த கீழுள்ள லிங்கை அழுத்தி உங்களது பெயரை பதிந்து உங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள் இந்த முயற்சிக்கு சுமார் ஆயிரம் கையொப்பங்களை திரட்டவும் அதன் பின் ஒரு இலட்சத்துக்கு அதை கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளோம் . இந்த முயற்சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குவதோடு இதுபற்றி உங்கள் நண்பர்கள் உறவினர்கள் ,தெரிந்தொர்களுக்கு தெரியப்படுத்துங்கள் . நண்பர்களே தயவு செய்து ஜாதி மதம் பாராமல் அனுப்புங்கள் உங்கள் உதவியை எதிர் பார்க்கிறோம்



          http://www.avaaz.org/en/petition/Protection_of_Muslims_in_Myanmar

Post a Comment

Previous Post Next Post